Friday, November 25, 2016

பாட்டி, வடை, காக்கா, குறள்

இன்று விசுவின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒருவர் விசுவிடம் "நீங்க, காக்கா வடை கதையைக்கூட மூன்று மணி நேரத்துக்கு சொல்வீங்க" என்று சொன்னார். இதை கேட்டபோது இதே காக்கா வடை கதையை வைத்து நான் எழுதிய ஒரு நாடகம் ஞாபகம் வந்தது.

இது 2009ல் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழாவுக்காக எழுதியது. அன்று நடித்த மாணவர்கள் விஷால், மணி, மனோ, அஷ்வின், கீர்த்தி போன்றோர் மிகச் சிறப்பாக இதைச் செய்தார்கள்.

பல குறள் மன்னர்

குறள் பாட்டு:
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
       மெய்வருத்தக் கூலி தரும்
      (ஒன்றே குலமென்று பாடுவோம் மெட்டில்)
    அகர முதல எழுத்தென்று பாடுவோம் உலகில்
    ஆதி பகவன் முதற்றே உலகென்று ஓதுவோம்
    மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்
           (அகர முதல)
எங்கும் குறள் எதிலும் குறள். குறளை எங்கே எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்னு ஒரு கதை மூலமா சொல்லப் போறோம். நான் சொல்லவந்த கருத்தை நமக்கு எல்லாம் தெரிஞ்ச பாட்டியும் காகமும் என்கிற கதை மூலம் சொல்லப்போறோம்.


ஒரு ஊர்லெ ஒரு பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த வழியா ஒருத்தர் வந்தார் (வ போ).

வபோ: வணக்கம் பாட்டி. ஏன் பாட்டி இந்த வயசுலயும் இப்படி கஷ்டப் பட்றீங்க?
பாட்டி: என்னப்பா செய்றது? என்னை கவனிக்க உங்க மாதிரி நல்ல பிள்ளைங்க இல்லை. அதனால என் பிழைப்புக்கு நானே வழி தேடிக்கிட்டேன். எனக்கு வருமானத்துக்கு எதுவும் வழி இல்லைன்னு சும்மா இருக்கறவங்களைப் பார்த்து,
இவ்வளவு வழிகள் இருக்கற இந்த உலகத்துல இப்படி சும்மா இருக்கறீங்களேன்னு சொல்லி இந்த பூமியே சிரிக்குமாம்.

       இலம்என்று அசயி இருப்பாரை காணின்
       நிலம்எனும் நல்லாள் நகும்.

வபோ: அருமையா சொன்னிங்க பாட்டி. இனிமேல் நான் எதுவும் இல்லைன்னு எப்பவும் சும்மா இருக்கமாட்டேன்.
அப்ப ஒரு காக்கா வந்து வடையை எடுத்துக்கிட்டு போயிருச்சாம். அதாவது பாட்டி சுட்ட வடையை அந்த காக்கா சுட்டுடிச்சி. அந்த பாட்டி காக்காவைப் பார்த்து சொன்னாங்க.
பாட்டி: காக்கா, என் கிட்ட போய் வடையை எடுத்துக்கிட்டயே. நீ செய்றது உனக்கே ஞாயமா இருக்கா?
காக்கா: பாட்டி வாஸ்து படி என் கூட்ல கிச்சன் வக்கல.  எனக்கு இதுதான் வழி.
இப்ப நீங்கதானே சொன்னிங்க.
       இலம்என்று அசயி இருப்பாரை காணின்
       நிலம்எனும் நல்லாள் நகும்.
இப்ப காக்கா மரத்துல உக்கார்ந்திரிச்சி. அப்ப அங்க ஒரு நரி வந்திச்சி. காக்காகிட்ட இருக்கற வடையை சுட திட்டம் போட்டிடிச்சி. 
நரி:   காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகா இருக்கறே. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே... உன் குரல் ரொம்ப நல்லா இருக்குமாமே. ஒரு பாட்டு பாட்றீயா?

கொக்கு தலையிலெ வெண்ணயை வைப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இந்த நரி காக்கா தலையிலே Ice factory-யையே தூக்கி வச்சிரிச்சி. வச்ச ஐஸ்லே உருகின காக்கா பாட்டு பாடிச்சி.

காக்கா: கா, கா, கா,

வச்ச ஐஸ்லெ உருகுன காக்கா, உடனே கா...கா...னு பாடிச்சி. வடை கீழே வீழ்ந்தது. நரி வடையை தூக்கிட்டு ஓடிடுச்சி. இதை கவனிச்ச பாட்டி...

பாட்டி: காக்கா, பாத்தியா என்ன ஆச்சி இப்ப. நாம ஒருத்தருக்கு ஏதாவது தீங்கு செய்தா, பின்னால நமக்கு அந்த தீங்கு வரும்.

         பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
         பிற்பகல் தாமே வரும்

காக்கா, நரியைப் பத்தி complain பண்ண ஆரம்பிடிச்சி.
காக்கா: பாட்டி, நீங்க என்ன சொன்னாலும். இந்த நரி இப்படி வடையை திருடி தின்னக்கூடாது. வடையை திருடறதே இந்த நரிக்க்கு வேலையா போச்சி. மத்தவங்க பொருள் மேல ஆசை படக்கூடாது.

பாட்டி:    காக்கா, மற்றவங்களை நாம குறை சொல்றதுக்கு முன்னாடி, நம்ம குறை என்னன்னு முதல்லே பாக்கனும். அப்படி பாத்தா நமக்கு எந்த பிரச்சனையும் வராது.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

காக்கா: (சோகமா பாடுது)

இரண்டாவது நாளும், இதே மாதிரி காக்கா வடையை எடுத்துக்கிட்டு போச்சி. நரியும் வந்தது. காக்காவை பாட்டு பாடச் சொல்லிச்சி. காக்கா உடனே வடையை கால்ல வச்சிக்கிட்டு காகான்னு பாடிச்சி. ஏமாந்த நரி, வேற ஐடியா பண்ணிச்சி.

நரி:    காக்கா நீ நல்லா dance பண்ணுவியாமே. எங்கே பாடிக்கிட்டே ஒரு dance பண்ணு பாக்கலாம்னு கேட்டிச்சி.

காக்கா யோசிச்சது. என்னடா இது. இந்த நரி விடாது போல இருக்குதே. இதுக்கு என்ன வழி செய்யலாம். குறள்லே என்ன சொல்லி இருக்குன்னு யோசிச்சது.

காக்கா: ஆஹா, தீர்வு கெடைச்சிரிச்சி.

நரியே, எதுக்கு இப்படி கஷ்டப்பட்றே. நானே இந்த வடையை உனக்கு தர்றேன்.  இதோ எடுத்துக்கோ.

(வடையை போட்டது)

நரிக்கு பெரிய குழப்பம்.

நரி: காக்காவே, நான் உன்னை இத்தனை முறை ஏமாத்தி இருக்கறேன். இருந்தாலும் நீயே எனக்கு உதவி செய்யறியே.

இத நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு. இந்த வடையை நீயே சாப்பிடு. நாம இனிமேல் நண்பர்களா இருப்போம்.

வர்ட்டா (ரஜினி ஸ்டைலில்)....

இப்ப நரிக்கும் புத்தி வந்தது. காக்காவுக்கும் பிரச்சனை தீர்ந்தது.

இதப்பார்த்த பாட்டி கேட்டாங்க...

பாட்டி: காக்கா, அந்த நரி உன்னை இத்தனை முறை ஏமாத்திச்சி. இருந்தாலும், அந்த நரிக்கு ஏன் நீயே வடையை கொடுத்தே?

காக்கா: பாட்டி, திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கறார் தெரியுமா?

நமக்கு யாராவது தீங்கு செய்தால், அதுக்கு நாம கொடுக்க வேண்டிய தண்டனை என்ன தெரியுமா? தீங்கு செய்தவர்கள் வெக்கப்படும்படி அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யறதுதான் நாம கொடுக்கற பெரிய தண்டனை.

          இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
          நன்னயம் செய்து விடல்.

அதனாலதான் வடையை நானே கொடுத்தேன்.

அடா, அடா, அடா. பாத்தீங்களா. ஒரு small காக்கா கதையிலேயே Extra Large size-லே குறள்களை பயன்படுத்த முடியுதே. அருமை, அருமை!

நன்றி!

No comments:

Post a Comment